மிகைப் பாடல்கள்

1. கடல் தாவு படலம்

383.

சென்றனன்,இராமன் பாதம் சிந்தையில் நிறுத்தி-
                                திண் தோள்
வன் திறல்அனுமன்-வாரி கடக்குமாறு உளத்தின்
                                எண்ணி,
பொன் திணிசிகர கோடி மயேந்திரப் பொருப்பின்
                                ஏறி,
நின்றிடும்தன்மை எம்மால் நிகழ்த்தலாம்
                        தகைமைத்து ஆமோ ?

     அனுமன்இராமபிரானின் திருவடியை மனத்திலே தியானித்து கடலைக்
கடக்க எண்ணி மகேந்திர மலையில் நிற்கும் தன்மை எம்மால் கூறும் தன்மை
உடையதோ.