தவம் தந்தநெஞ்சின் தனது ஆர் உயிர்த் தம்பியோடும் நவம் தந்தகுன்றும், கொடுங் கானமும், நாடி ஏகி, கவந்தன்தனது ஆவிகவர்ந்து, ஒரு காலும் நீங்காச் சிவம் தந்து,மெய்ம்மைச் சபரிக்குத் தீர்ந்து வந்தான்.
கவந்தனுக்கு சிவம்தந்தான் - சிவம் - மங்கலம். தீர்ந்து வந்தான் - முடிபாகி வந்தான் என்று சாம்யப் பொருள் உரைக்கலாம். (88-1)