425. | என்றுஉரைத்திடுதி; பின், அயோத்தி எய்தினால், வென்றி வெஞ்சிலையினான் மனம் விழைந்திடாது; அன்றியே, மறைநெறிக்கு அருகன் அல்லனால்; பொன் திணிமௌலியும் புனைதல் இல்லையால். |
இராமனோடு நான்அயோத்தி வந்தாலும் மறைநெறி இயற்றும் தகுதியும், முடிபுனையும் தகுதியும் எனக்கு இல்லை என்று தன்மனம் நொந்து பிராட்டி கூறினாள். (38-1) |