425. 

என்றுஉரைத்திடுதி; பின், அயோத்தி எய்தினால்,
வென்றி வெஞ்சிலையினான் மனம் விழைந்திடாது;
அன்றியே, மறைநெறிக்கு அருகன் அல்லனால்;
பொன் திணிமௌலியும் புனைதல் இல்லையால்.

     இராமனோடு நான்அயோத்தி வந்தாலும் மறைநெறி இயற்றும் தகுதியும்,
முடிபுனையும் தகுதியும் எனக்கு இல்லை என்று தன்மனம் நொந்து பிராட்டி
கூறினாள்.                                                (38-1)