429.

"ஐய நின்சரணம் சரண் !" என்று, அவன் அஞ்சி,
வையம் வந்துவணங்கிட, வள்ளல் மகிழ்ந்தே,
"வெய்யவன் கண்இரண்டொடு போக !" என, விட்ட
தெய்வ வெம் படைஉற்றுள தன்மை தெரிப்பாய்.

     அவன் - சயந்தன்.வள்ளல் - இராமன் "கண் இரண்டொடு போக"
சயந்தன் ஆகிய காகத்துக்கு இரண்டு கண்களை மட்டும் போக்கியது, ஆகும்.
தெய்வ வெம் படை - "அயல் கல் எழு புல்லால் வேக வெம்படை" என்று
(5421) முன்பு கூறப்பட்டது.                                    (77-3)