11.பாசப்படலம்

462.

என்றே,'இவன் இப்பொழுது என்கையினால்
                              மடிந்தால்
நன்றே மலர்மேல்உறை நான்முகன் ஆதி தேவர்,
"பொன்றோம் இனி என்றும்; இருந்து உயிர்
                             போற்றுதற்கு
நின்றே துயர்தீர நிறுத்தினன்" என்ப மன்னோ.'

     இவன் -இந்திரசித்து. 'என்கையால் மடிந்தால் பிரமன் முதலிய
தேவர்கள் நம்துன்பம் நீங்கச் செய்தான் என்று சொல்வர்' என்று அனுமன்
நினைத்ததாம்.                                             (50-1)