தன் உறைக்குஉறுகண் வெய்யோர்தாம் இயற்றலும் கேட்டு, 'இன்னே, அன்னவர்க்குஇறுதி ஆக, அணி நகர் அழிப்பல்' என்னா, செந் நிறச்சிகைய வெம் போர் மழு, பின்னர்ச் சேறல் ஓக்கும்- அல் நிறத்துஅண்ணல் தூதன் அனல் கெழு கொற்ற நீள் வால்.
தன் இறை - இராமன்.உறுகண் - துன்பம். அனுமன் வால். மழு பின்னால் செல்வது போன்றது. மழு - நெருப்புப்படை. அனுமன் வாலில் நெருப்பு வைத்தபடியால் அது திருமாலின் மழு போன்றதாயிற்று. (135-1)