'தா இல்மேலவர்க்கு அருந் துயர் விளைத்திடின், தமக்கே மேவும், அத்துயர்' எனும் பொருள் மெய்யுற, மேல்நாள் தேவர்தம்பதிக்கு இராவணன் இட்ட செந் தழல்போல், ஓவிலாது எரித்துஉண்டமை உரைப்பதற்கு எளிதோ ?
அழகான கருத்து.'மேலோர்க்குத் துன்பம் செய்தால் அத்துயர் தமக்கேவரும்' என்பதற் கிணங்க. அமராவதிக்கு இராவணன் இந்திரசித்து மூலமாகஇட்ட நெருப்பு இலங்கையை எரி்த்தது என்பதாம். (43-1)