4769. | புறத்துஉறல்அஞ்சி, வேறுஓர் அரணம்புக்கு உறைதல் போக்கி, மறத்தொழில்அரக்கன் வாழும் மாநகர்,மனுவின் வந்த திறத் தகைஇராமன் என்னும் சேவகற்பற்றி, செல்லும் அறத்தகை அரசன்திண்போர் ஆழியும்அனையன் ஆனான். |
புறத்துஉறல்அஞ்சி -வெளிப்படையாக இருக்கப் பயப்பட்டு; வேறுஓர்அரணம் புக்கு - மற்றொரு பாதுகாப்பான இடத்தில்; உறைதல் போக்கி -தங்குதலை விலக்கியும்; மனுவின் வந்த - மனிதனைப் போன்றுமண்ணுலகுக்கு வந்த; திறத்தகை இராமன் என்னும் சேவகற் பற்றி - வலிமையும் தகுதியும் பெற்ற இராமபிரான் என்னும் வீரனை இறுகப் பிடித்துக் கொண்டு; மறத்தொழில் அரக்கன் வாழும் - வீரத்தையே தொழிலாகக் கொண்ட இராவணன் வாழுகின்ற; மாநகர் - பெரிய நகருக்கு; செல்லும் - போகிற; அறத்தகையரசன் - தகுதிபெற்ற தருமராஐனின்; திண்போர் ஆழியும் அனையன் ஆனான் - வலிமை மிக்க போர்புரியும் ஆணைச் சக்கரத்தை (அனுமன்) ஒத்திருந்தான். தருமராசன்(யமன்) இலங்கைக்குள் அடியெடுத்து வைத்தான் என்பது குறிப்பு. ஆதியில் தர்ம தேவதைஎன்றும் கூறலாம். திருமாலின் சக்கரம் என்று உரைகாண்பது அபசாரம் மனுவின் - மனிதனைப்போல், மனுகுலம் என்றும் கூறலாம். (29) |