அனுமன் வானில்சென்ற காட்சி | 4772. | நாலினோடுஉலகம் மூன்றும் நடுக்குற,அடுக்கு நாகர் மேலின்மேல்நின்றகாறும் சென்றகூலத்தன், 'விண்டு காலினால் அளந்தவான முகட்டையும்கடக்கக் கால வாலினால் அளந்தான்' என்று வானவர்மருள, சென்றான். |
நாலினோடு உலகம்மூன்றும் நடுக்குற - கீழ் ஏழு உலகங்களும் நடுக்கம் அடைய; நாகர் மேலின்மேல் நின்ற - தேவர்கள் மேலும் மேலும் சிறப்புடன் நிலைத்துள்ள; அடுக்கு காறும் - அடுக்கப்பெற்ற உலகம் வரையிலும்; சென்ற கூலத்தன் - பயணம் செய்த வாலையுடைய அனுமன்; விண்டு காலினால் அளந்த வானமுகட்டையும் கடக்க - திருமாலின் திருவடியால் அளந்த வானத்தின் உச்சியையும் கடப்பதற்கு; கால வாலினால் அளந்தான் என்று - காலபாசம் போன்ற வாலினால் அளந்து விட்டான் என்று; வானவர் மருளச் சென்றான் - தேவர்கள் வியப்படையப் போயினான். மாயன் காலால்அளந்த உலகத்தை அனுமன் வாலால் அளந்தானோ என்று வானவர் மருண்டனர். கூலம் - வால். விண்டு - திருமால். கால வால் -கால பாசத்தை ஒத்தவால். (32) |