4782.

தள்ளற்குஅரு நல்சிறை மாடு
     தழைப்பொடுஓங்க,
எள்ளற்கு அருநல்நிறம் எல்லை
     இலாதுபுல்ல,
வள்ளல் கடலைக்கெட நீக்கி,
     மருந்து வவ்வி,
உள்உற்றுஎழும்ஓர் உவணத்து
     அரசேயும்ஒக்க,*
 

     தள்ளற்கு அரும்நல்சிறை - பிறரால் வெட்ட முடியாதநல்ல
இறக்கைகள் ; மாடு தழைப்பொடு ஓங்க - பக்கத்தில் செழிப்புடன் உயரவும்;
எள்ளற்கு அரு நன்னிறம் - இகழ்ச்சி இல்லாத நல்ல வண்ணம்;  எல்லை
இலாது புல்ல -
மிகுதியாகத் தழுவி விளங்கவும்; வள்ளல் கடலைக் கெட
நீக்கி -
வளமான கடலரசன் தோற்றுப்போகவென்று அவனை விலக்கி;
மருந்து வவ்வி -  தேவாமிர்தத்தை அபகரித்து;  உள்உற்று எழும் -
கடலுக்குள் புகுந்து மேலே எழுந்து வருகின்ற;  ஓர் உவணத்து அரசேயும்
ஒக்க -
ஒப்பற்ற கருடராசனைப் போல.

     தள்ளற்கு அரு - வெட்டமுடியாத தன் தலையைத் தள்ளத் தரும் என்றவாள்பூட்டிய தடங்கையினன் (திருத்தொண்டர் அந் - 14) மைந்நாகமலை
-இந்திரனின் வச்சிரத்தால் வெட்டப்படாமையையும் கருடன் சிறகும்
அங்ஙனமேஇருத்தலையும் அறிக. கடலை - ஐ - அல் வழிச் சாரியை - கடல்
கெடஎன்க. கெட - தோற்றுப்போக.                           (42)