4785.  

பூவால்இடையூறு புகுந்து,
     பொறாதநெஞ்சின்
கோ ஆம் முனிசீறிட, வேலை
     குளித்தஎல்லாம்
மூவா முதல் நாயகன் மீள
     முயன்ற அந்நாள்
தேவா சுரர்வேலையில் வந்து எழு
    திங்கள்என்ன,*

     பூவால் இடையூறுபுகுந்து - இந்திரனுக்கு வழங்கிய மாலையால்
துன்பம் உண்டாகி; பெறாத நெஞ்சின் - பொறுமையற்ற உள்ளமுடைய;
கோஆம் முனி - தலைமைப் பண்புடைய துருவாச முனிவன்; சீறிட - சீற்றம்
அடைய; வேலை குளித்த எல்லாம் -  கடலில் மூழ்கிய எல்லாப்
பொருள்களும்; மூவா முதல் நாயகன் - முதுமை அடையாத முதன்மையான
திருமால்; மீள - அப்பொருள்கள் மீண்டு்ம் வரும்படி; தேவாசுரர் முயன்ற
அந்நாள் -
தேவாசுரர் மூலம் கடல் கடைந்து முயற்சி செய்த காலத்தில்;
வேலையில் வந்து எழு - கடலின் கண்ணே உதயமான; திங்கள் என்ன -
சந்திரனைப்போல.

     தான் வழங்கியமாலையை அவமதித்த இந்திரனைத் துருவாச முனிவர்
சபிக்க, விண்ணுலகப் பொருள்கள் கடலில் மறைந்தன. திருமாலும் தேவர்களும்
கடல் கடைந்தபோது அவை வெளிப்பட்டன. அப்பொருள்களுடன்
வெளிப்பட்ட சந்திரனைப்போல் மைந்நாகமலை வெளிப்பட்டது.       (45)