4796. 

'கார்மேகவண்ணன் பணிபூண்டனன்
      காலின்மைந்தன்
தேர்வான்வருகின்றனன் சீதையைத்
     தேவர்உய்யப்
பேர் வான் அயல்சேறி; இதில் பெறும்
     பேறு இல்'என்ன
நீர்வேலையும்என்னை உரைத்தது"
     நீதிநின்றாய்

     நீதி நின்றாய்-ஒழுக்கத்தில் நிலைத்து நிற்பவனே !; கார்மேக
வண்ணன்
- கருத்த மேகம் போன்ற நிறமுடைய இராமபிரானின்; பணி
பூண்டனன் காலின் மைந்தன்
- கட்டளை மேற்கொண்ட வாயுதேவனின்
புத்திரன்; தேவர் உய்யச் சீதையைத் தேர்வான் வருகின்றனன் -
தேவர்கள்வாழ வேண்டும் என்று சீதா பிராட்டியைத் தேடும்பொருட்டு
வருகின்றான்;பேர் வான் அயல் சேறி - பெரிய ஆகாயத்தின் பக்கத்தில்
சேர்வாயாக;இதில் - இதைவிட; பெரும்பேறு இல் என்ன - பெரிய
பாக்கியம் இல்லை என்று; என்னை - என்னிடத்தில்;  நீர் வேலையும்
உரைத்தது
- நற்பண்பு வாய்ந்த கடலும் கூறிற்று.

     இராமபிரானின்கட்டளை மேற்கொண்டு வாயு புத்திரன் சீதையைத் தேடி
வருகின்றான். நீ அவனுக்கு உதவுக என்று கடல் கூறிற்று என்று
மைந்நாகமலை பேசிற்று. பணி - கட்டளை; பூண்டனன் - முற்றெச்சம். கால் -
காற்று. (வாயு தேவன்) நன்நெடுங்காலின் மைந்தன் நாமமும் அனுமன் (சுந் -
உரு 31)                                                (56)