| 4797. | நற்றாயினும் நல்லன் எனக்கு இவன் என்று நாடி இற்றே இறைஎய்தினை ஏய்ந்தது கோடி என்னால் பொற்றார் அகல்மார்ப ! தம் இல்லுழை வந்தபோதே உற்றார்செயல்மற்றும் உண்டோ ? என உற்றுஉரைத்தான் |
பொன்தார் அகல்மார்ப -பொன்மாலை அணிந்த விரிந்த மார்பை உடையவனே; இவன் - இந்த அனுமன்; எனக்கு நற்றாயினும் நல்லன் - என்னிடம் பெற்ற தாயைவிட அன்புடையவன்; என்று நாடி இற்றே இறை எய்தினை - என்று ஆராய்ந்து இங்கே சிறிது வந்து; என்னால் ஏய்ந்தது கோடி - என்னால் தரக்கூடியதை ஏற்றுக் கொள்வாயாக; தம் இல்உழை வந்த போதே - (விருந்தினர்) தம்முடைய வீட்டிற்கு வந்த உடனே; உற்றார் செயல் மற்றும் உண்டு - வீட்டுக்கு உரியவர்களின் செய்கை (விருந்தோம்பலைவிட) வேறு இருக்க முடியுமோ ?; என உற்று உரைத்தான் - என்று அனுமனை அடைந்து கூறினான். நான், தாயினும்சிறந்தவன் என்று கருதி என்பால் வந்து தங்கி என்னுடைய உபசாரத்தை ஏற்றுக்கொள். விருந்தினர் வந்தால் உபசரிப்பதை விட இல்லறத்தார்க்கு வேறு கடமை உண்டோ என்று மைந்நாகமலை கூறிற்று. நற்றாய் - பெற்ற தாய். கோடி - கொள்க. கொள் + தி = கோடி. (57) |