4808. | பெண்பால்ஒருநீ பசிப்பீழை ஒறுக்கநொந்தாய் உண்பாய் எனதுஆக்கையை யான்உத வற்குநேர்வல் விண்பாலவர்நாயகன் ஏவல் இழைத்துமீண்டால் நண்பால் எனக்சொல்லினன் நல்அறி வாளன்; நக்காள். |
நல்அறிவாளன் -நல்லஅறிவுடைய அனுமான் (சுரசையிடம்); நீ ஒரு பெண்பால் - நீ பெண்ணாக உள்ளாய்; பசிப்பீழை - பசியாகிய துன்பம்; ஒறுக்க நொந்தாய் - வருத்துவதால் துன்புற்றாய்; விண்பாலவர் நாயகன் - விண்ணுலகத்தவரின் தலைவனான இராமபிரானின்; ஏவல் இழைத்து மீண்டால்- கட்டளையைப் புரிந்து திரும்பினால்; எனது ஆக்கையை உண்பாய் -(அப்போது) என்னுடைய உடலை உண்பாயாக; நண்பால் உதவற்கு யான்நேர்வல் - நட்புடன் வழங்க நான் உடன்பட்டேன்; எனச் சொல்லினன் -என்று கூறினான்; நக்காள் - (அது கேட்டவுடன் சுரசை) ஏளனமாகச்சிரித்தாள். இராமபிரானின்கட்டளையை நிறைவேற்றி மீண்ட பிறகு நீ என்னுடைய உடம்பை உண்ணுக. நான் உனக்கு அதை வழங்குவேன் என்று அனுமன் கூறினான். அதுகேட்ட சுரசை சிரித்தாள். இங்கே விண் என்றது பரமபதத்தை. விண்பால் இருப்பாய் - என்னும் திருவாய்மொழிப் பாசுரத்துக்கு நம்பிள்ளை வரைந்த உரையைப் பார்க்கவும். பீழை -துன்பம். (68) |