4811.

நீண்டான்உடனே சுருங்கா
     நிமிர்வாள் வயிற்றின்
ஊண்தான் எனஉற்று ஓர் உயிர்ப்பு
     உயிராதமுன்னர்
மீண்டான் அதுகண்டனர் விண்உறை
     வோர்கள் எம்மை
ஆண்டான்வலன்என்றுஅலர் தூஉய் நெடிது
     ஆசிசொன்னார்.

     நீண்டான் -வளர்ந்துஉயர்ந்த அனுமன்; உடனே சுருங்கா -
சடக்கெனத் தன்னைச் சுருக்கிக் கொண்டு; நிமிர்வாள் வயிற்றின் - ஓங்கி
வளர்ந்த சுரசையின் வயிற்றில்; ஊண்தான் என உற்று - உணவு என்று
சொல்லும்படி பொருந்தி; ஓர் உயிர்ப்பு உயிராத முன்னர் - அவள் ஒரு
மூச்சு விடுவதற்கு முன்; மீண்டான் - வெளி வந்தான்; விண் உறைவோர்கள்
-
தேவர்கள்; அது கண்டனர் - அச் செயலைப் பார்த்தனர்; எம்மை
ஆண்டான் வலன் என்று -
எம்மைப் பாதுகாக்க வந்த அனுமன் வல்லமை
உடையவன் என்று; அலர் தூஉய் நெடிது ஆசி சொன்னார் - மலர் தூவி
நீண்ட ஆசி கூறினார்கள்.

     நெடிது வளர்ந்துஉடனே சுருங்கி வயிற்றில் நுழைந்து வெளி வந்தது
அனுமனது சாதுர்யத்தையும் வல்லமையையும் உணர்த்தியமையால் தேவர்
மகிழ்ந்தனர்.                                            (71)