கலிநிலைத்துறை 4813. | கீதங்கள்இசைத்தனர் கின்னரர் கீதம்நின்ற பேதங்கள்இயம்பினர் பேதையர் ஆடல்மிக்க பூதங்கள்தொடர்ந்து புகழ்ந்தன பூசு ரேசர் வேதங்கள்இயம்பினர் தென்றல் விருந்துசெய்ய. |
கின்னரர்கீதங்கள் - கின்னரர்கள்பாடல்களை; இசைத்தனர் - பாடினார்கள் ; பேதையர் கீதம் நின்ற - மகளிர்கள் பாடல்கள் அமைந்த; பேதங்கள் இயம்பினர் - இசை விகற்பங்களைப் பாடினார்கள்; ஆடல்மிக்க பூதங்கள் - ஆடுதலிற் சிறப்புப் பெற்ற பூத கணங்கள்; தொடர்ந்து புகழ்ந்தன- விடாமற் போற்றின; பூசுரேசர் - தலைசிறந்த அந்தணர்கள்; வேதங்கள் இயம்பினர் - வேதங்களை இசைத்தனர்; தென்றல் வி்ருந்து செய்ய - தென்றல் காற்று புதியஊக்கத்தை வழங்க. அனுமனின் அரியசெயலைக் கண்டு கின்னரர் முதலானவர்கள் கொண்டாடியதைப் பேசுகிறது. (73) |