14. திருவடி தொழுதபடலம் 

482.

போயினர்களிப்பினோடும், புங்கவன் சிலையின்
                          நின்றும்
ஏயின பகழி என்னஎழுந்து, விண் படர்ந்து, தாவி,
காய் கதிர்க்கடவுள், வானத்து உச்சியில் கலந்த
                          காலை,
ஆயின வீரரும்போய், மதுவனம் அதில் இறுத்தார்.

     வானரர் இராமன்அம்பு போல் சென்றனர்; நன்பகலில் மதுவனம்
சேர்ந்தார்.                                                (11-1)