14. திருவடி தொழுதபடலம்
போயினர்களிப்பினோடும், புங்கவன் சிலையின் நின்றும் ஏயின பகழி என்னஎழுந்து, விண் படர்ந்து, தாவி, காய் கதிர்க்கடவுள், வானத்து உச்சியில் கலந்த காலை, ஆயின வீரரும்போய், மதுவனம் அதில் இறுத்தார்.
வானரர் இராமன்அம்பு போல் சென்றனர்; நன்பகலில் மதுவனம்சேர்ந்தார். (11-1)