4821. 

பெண்பால்எனக்கருது பெற்றியொழி உற்றால்
விண்பால்அவர்க்குமுயிர் வீடுறுதல் மெய்யே
கண்பால்அடுக்கவுயர் காலன்வரு மேனும்
உண்பேன்ஒருத்தியது ஒழிப்பதரி தென்றாள்.

(அனுமன் மொழி கேட்டஅங்கார தாரை)

     பெண்பால்எனக்கருது பெற்றி ஒழி -  (என்னை) ஒருபெண்தானே
என்று நினைக்கும் தன்மையை விட்டுவிடு; உற்றால் - என்எதிரே வந்தால்;
விண்பால் அவர்க்கும் - தேவ லோகத்தில் உள்ள தேவர்க்கும்; உயிர்
வீடுறுதல் மெய்யே -
உயிரானது உடம்மை விடுதல் உறுதியாகும்; கண்பால்
-
என்னுடைய கண்ணின் பக்கம்; உயர் காலன் அடுக்க வருமேனும் -
யமன் அணுக வருமேயாயினும்;
உண்பான் அருத்தியது -உண்ணவிரும்பிய
செயலை; ஒழிப்பது அரிது -விலக்க முடியாது; என்றாள் - என்று
கூறினாள்.

     அரக்கி அனுமனைநோக்கி "என்னைப் பெண்தானே என்று கருதாதே;
எனக்கு முன் வந்தால் உண்பேன்" என்று கூறினாள். பெற்றி - தன்மை.
வீடுவது - அழிவது. மெய் -உறுதி.                              (81)