அனுமன் அங்காரதாரை வயிற்றைக் கிழித்தேகல்

4822. 

திறந்தாள்எயிற்றை, அவள்; அண்ணலிடை சென்றான்
அறந்தான்அரற்றியது அயர்த்தமரர் எய்த்தார்
இறந்தான்எனக்கொடுஓர் இமைப்பதனின் முன்னம்
பிறந்தான்எனப்பெரிய கோளரி பெயர்ந்தான்.

     அவள் திறந்தாள்எயிற்றை - (அனுமனை விழுங்க)அங்காரதாரை
வாயைத் திறந்தாள்; அண்ணல் - பெருமையை உடைய அனுமன்; இடை -
அந்த வாயின் வழியில்; சென்றான் - போனான்; இறந்தான் எனக்கொடு -
அனுமன் இறந்து விட்டான் என்று நினைத்துக்கொண்டு; அறம் அரற்றியது -
அறக்கடவுள் கதறியது; அமரர் எய்த்தார் - தேவர்கள் வருந்தினர்; பெரிய
கோளரி -
பெரிய சிங்கம் போன்ற அனுமன்; ஓர் இமைப்பதனின் முன்னர்
-
ஒருமுறை கண்ணை இமைப்பதற்கு முன்பு; பிறந்தான் என -  
பிறந்து
விட்டான்என்று கூறும்படி; பெயர்ந்தான் - திரும்பி வந்தான்.

     அனுமன்அரக்கியின் வாயின் வழியில் வயிற்றில் புகுந்தான். அது கண்டு
அறம் அரற்றியது. தேவர்கள் வருந்தினர். அப்போது அனுமன் இமைப்பதன்
முன்பு பிறந்தான் என்று கூறும்படி திரும்பினான்.                  (82)