| 4824. | சாகா வரத்தலைவரில் திலகம் அன்னான் ஏகா அரக்கிகுடர்கொண்டுஉடன் எழுந்தான் மாகால் விசைக்கவடம்மண்ணிலுற வாலோடு ஆகாயம் உற்றகதலிக்கு உவமை யானான். |
சாகாவரத்தலைவரில் - இறவா வரம் பெற்றசிரஞ்சீவிகளில்; திலகம் அன்னான் - திலகம் போன்ற அனுமன்; ஏகா - அரக்கியின் வயிற்றினுள் சென்று; உடன் - விரைவில்; அரக்கி குடர்கொண்டு - அரக்கியின் குடலை எடுத்துக்கொண்டு; எழுந்தான் - மேலே எழுந்தான்; (அவன்) மாகால் விசைக்க - பெரிய காற்றடிக்க; வடம்மண்ணில் உற - கயிறானது மண்ணில் இருக்க; வாலோடு - வாலுடனே; ஆகாயம்உற்ற கதலிக்கு - ஆகாயத்திற் பறக்கின்ற காற்றாடிக்கு; உவமையானான் - ஒப்புமையானான். சிரஞ்சீவியர்கள் எழுவராவர். அசுவத்தாமன், மாபலி, வியாசன், அனுமன், விபீடணன், மார்க்கண்ட முனி, பரசுராமன் (பொருட்டொகை நி - 599) என்பவர். அவருள் அனுமன் சிறந்தவன் என்று கவிச்சக்கரவர்த்தி திருவுளம் பற்றுகிறார். ஆதலின் சாகாவரத் தலைவரில் திலகம் அன்னான் என்றால். கதலி - கற்றாடி. (84) |