4839.

நானநாள்மலர்க் கற்பக நறுவிரை நான்ற
பானம் வாய்உறவெறுத்த, தான்ஆறுடைப் பறவை
தேன்அவாம்விரைச் செழுங் கழுநீர்த் துயில்செய்ய
வானயாறுதம்அரமியத் தலம்தொறும் மடுப்ப.

     நாள் - அன்று பூத்த; நான மலர்க் கற்பகம் - மணத்துடன் கூடிய
மலர்களைப் பெற்ற கற்பக மரங்களின்; நறுவிரை நான்ற பானம் - நல்ல
மணத்துடன் பெருகிய தேன்;  வாய் உற வெறுத்த - தம்முடைய வாயில்
பெருக (உண்டு) தெவிட்டிய; ஆறு தாள் உடைப் பறவை - ஆறு
கால்களைப் பெற்ற வண்டுகள்; தேன் அவாம் - வேறு தேனை உண்ண
விரும்பி; விரை செழுங்கழுநீர் - மணத்துடன் கூடிய செங்கழுநீர்ப் பூவில்;
துயில் செய்ய - தங்குதலை மேற்கொள்ளும்படி; வான யாறு - ஆகாய
கங்கையானது; தம் அரமியத் தலந்தொறும் - அவரது நிலா
முற்றங்கள்தோறும்; மடுப்ப - பாயப் பெற்றன.

     பானம் வாயுறஎன்பதற்கு உண்ட தேன் வாய்வழியே வெளிப்பட
என்றும் கூறலாம்.                                         (5)