4842. | மணிகள்எத்துணை பெரியவும், மால்திரு மார்பின் அணியும்காசினுக்கு அகன்றன உளஎனல் அரிதால்; திணியும்நல்நெடும் திருநகர், தெய்வமாத் தச்சன் துணிவின்வந்தனன், தொட்டுஅழகு இழைத்தஅத் தொழில்கள் |
எத்துணை பெரியமணிகள் - எவ்வளவு பெரியமாணிக்கங்களும்; மால் - திருமால்; திருமார்பின் அணியும் - அழகிய மார்பில் அணிந்துள்ள; காசினுக்கு அகன்றன உள எனல் - கவுத்துவம் என்னும் மணியைவிடச் சிறந்துள்ளவை உள்ளன என்று கூறுவது இல்லை; (அதைப்போல்) தெய்வமாத் தச்சன் - தேவதச்சன் (மயன்); துணிவின் வந்தனன் - உறுதியுடன் வந்து; தொட்டு அழகு இழைத்த - (பிறரை ஏவாமல்) தன் கையில் தொட்டு; அத்தொழில்கள் - செய்த வேலைப்பாடுகள்; நல்நெடுந்திருநகர் - நல்ல பெரிய இலங்கையில்; திணியும் - (ஒப்பற்றுச்) செறிந்திருக்கும். அதுபோல் எனும்உவமஉருபு மறைந்துள்ளமையால் எடுத்துக் காட்டுவமையணி. காசு - மணி. தெய்வமாத்தச்சன் - மயன். விசுவகன்மன் என்றும் கூறலாம். இந்தக் கவி 'அன்மயப் பொருள்' என்பது பழைய உரை. அன்மயம் - கொண்டுகூட்டுப் பொருள்கோள். (8) |