4848.

மரகதத்தினும் மற்றுஉள மணியினும் வனைந்த
குரக தத்தடந்தேரினம் அவைபயில் கொட்டில்
இரவி வெள்கநின்று இமைக்கின்ற இயற்கைய
                                என்றால்
நகரம் ஒக்குமால்நல்நெடுந் துறக்கம், இந்நகர்க்கு.

     மரகதத்தினும் -மரகதக்கற்களாலும்; மற்றுள - வேறுவகையாக
உள்ள; மணியினும் - மாணிக்கங்களாலும்; வனைந்த - அமைக்கப்பட்ட;
குரகதத் தடந்தேர் இனம் - குதிரைகளால் இயங்கும் தேர்க்கூட்டமாகிய;
அவைபயில் - அவைகள் தங்கியிருக்கும் தேர்ச்சாலைகள்; இரவி -
சூரியனும்; வெள்க நின்று - நாணம் அடையும்படி இருந்து; இமைக்கின்ற
இயற்கைய -
ஒளிவீசும் தன்மையுடையன; என்றால் - என்று 
கூறப்பெறுமானால்; இந்நகர்க்கு -  இந்த இலங்கைக்கு (ஒப்புக்கூறின்);
நல்நெடும் துறக்கம் - நல்லபெரிய சுவர்க்கம்; நரகம் ஒக்கும் - நரகமே
போன்றிருக்கும்.

     இமைத்தல் - ஒளி வீசுதல்                                (14)