4849.

திருகுவெஞ்சினத்து அரக்கரும் கருநிறம் தீர்ந்தார்;
அருகு போகின்ற திங்களும் மறுஅற்றது;-அழகைப்
பருகும் இந்நகர்த் துன்ஒளி பாய்தலின்;- பசும்பொன்
உருகுகின்றதுபோன்று உளது; உலகுசூழ் உவரி.

     அழகைப் பருகும் -உலகஅழகையெல்லாம் தன்பால் அடக்கும்;
இந்நகர் -
இந்த இலங்கையில்; துன்ஒளி - நிரம்பிய ஒளியானது; பாய்தலின்
-
(எங்கும்) பரவுதலாலே; திருகும் - மாறுபட்ட; வெஞ்சினத்து அரக்கரும் -
கொடுங்கோபத்தை

உடைய அரக்கர்களும்;கருநிறம் தீர்ந்தார் - கரிய நிறம் நீங்கப் பெற்றனர்;
அருகு -
பக்கத்தில்; போகின்ற திங்களும் - செல்கின்ற சந்திரனும்; மறு
அற்றது -
(தன்பால்பெற்ற) களங்கம் நீங்கியது; உலகு சூழ் உவரி - உலகைச்
சுற்றியுள்ள கருங்கடல்; பசும்பொன் -  மாற்றுயர்ந்த பொன்னானது;
உருகுகின்றது போன்று உளது -
உருகி (அலையடிப்பது) போன்றுள்ளது.

     அருகு பேர்கின்றதிங்கள் என்னும் பாடம் சிறக்கும். பேர்கின்ற என்பது
போகின்ற என்றும் படிக்கப்படும். பேர்தல் - நிலை குலைதல். உவரி -
கருங்கடல், பசும்பொன் - மாற்று உயர்ந்த பொன் (புறம் 141).        (15)