4851.

தேனும்சாந்தமும் மான்மதச் செறிநறுஞ் சேறும்
வான நாள்மலர்க்கற்பக மலர்களும் வயமாத்
தான வாரியும்நீரொடு மடுத்தலின், தழீஇய
மீனும் தானும்ஓர் வெறிமணம் கமழும் அவ்வேலை.

    தேனும்சாந்தமும் - தேனையும் சந்தனத்தையும்; செறிநறும் -
நறுமணம் செறிந்துள்ள;  மான்மதச் சேறும் - கஸ்தூரிக் குழம்பையும்; வான
நாள் -
வானிலுள்ள நட்சத்திரங்களைப்போல;  மலர் - மலர்ந்த;
கற்பகமலர்களும் -
கற்பகப் பூக்களையும்; வயமா - வெற்றி பெற்ற
யானைகளின்; தானவாரியும் - மதவெள்ளத்தையும்; நீரொடு மடுத்தலின் -
நதியின் நீருடன் உட்கொண்ட காரணத்தால்; அவ்வேலை - அக் கடலானது;
தழீஇய மீனும் -
தன்னைச் சார்ந்து வாழ்கின்ற மீன்களும்; தானும் -
(கடலாகிய) தானும்; ஓர் வெறிமணம் கமழும் - ஒப்பற்ற தெய்வமணம்
பெறும்.

     கடலானது, தேன்முதலாகிய பொருள்களை நதியில் நீருடன் மடுப்பதால்
மீனும் தானும் தெய்வமணம் பெற்றது. வெறி - தெய்வத்தன்மை - வெறியுறு
சிறப்பு (தொல் - பொருள்) நீர் என்றது நதியை. நீர்ப்பிணக்கு, நிலப்பிணக்கு
என்னும் தொடர் காண்க - (தனிச்சுலோகி - கிட்கிந்தா) நாள் - நட்சத்திரம்.
மலர் என்பது கற்பகத்தைச் சாராது மலரைச் சார்ந்தது, தழாத்தொடர்.   (17)