4865.தேறல் மாந்தினர்; தேன்இசை
     மாந்தினர்; செவ்வாய்
ஊறல் மாந்தினர்; இன்னுரை
     மாந்தினர்; ஊடல்
கூறல் மாந்தினர்; அனையவர்த்
     தொழுது அவர் கோபத்து
ஆறல் மாந்தினர் - அரக்கியர்க்
     குயிர் அன்ன அரக்கர்.

     அரக்கியர்க்குஉயிர் அன்ன - அரக்கிகளுக்குஉயிர்போன்ற;
அரக்கர் -
இராக்கதர்கள்; தேறல் மாந்தினர் - (மகளிர் வழங்கிய) மதுவைக்
குடித்தார்கள்; தேன் இசை மாந்தினர் - (அவர்கள்
பாடும்) தேன்
போன்றஇசையைச் சுவைத்தார்கள்; செவ்வாய் ஊறல் மாந்தினர் -
அதரபானத்தை உறிஞ்சினார்கள்; இன்னுரை மாந்தினர் - (கலவிப் போரில்
அவர்கள் மிழற்றிய) காதல் மொழியை அனுபவித்தனர்; ஊடல் கூறல்
மாந்தினர் -
(அவர்களின்) ஊடலின் கூறுபாடுகளை எல்லாம் கண்டு
அனுபவித்தனர்; அனையவர்த் தொழுது - அம் மகளிரை வணங்கி; அவர்
கோபத்து ஆறல் மாந்தினர் -
ஊடலின் தணிவினை உட்கொண்டு அமைதி
பெற்றனர்.

     மாந்துதல் -பலபொருள் கொண்ட ஒரு சொல். அது உண்ணுதல்,
குடித்தல் வருந்துதல். அடங்குதல் (சாந்தி பெறுதல்) என்று பலபொருள் தரும்.
                                                         (31)