அனுமன்பவளக்குன்றில் இருத்தல்

 4876.

என்றனன்,இலங்கை நோக்கி
     இனையனபலவும் எண்ணி,

நின்றனன்;அரக்கர் வந்து
     நேரினும்நேர்வர் என்னாத்
தன்தகை அனையமேனி
     சுருக்கிஅச்சரளச் சாரல்
குன்றிடைஇருந்தான்; வெய்யோன்
     குடகடல்குளிப்ப தானான்.

     (அனுமன்) இலங்கைநோக்கி - இலங்கையைப் பார்த்து; (மதி
முட்டுவன மாடம் -
(உளர்) விற்படை பெரிது என்கோ 43); என்றனன் -
இவ்வாறு கூறினான்; இனையன - இப்படிப்பட்ட; பலவும் - பலவற்றையும்;
எண்ணி - சிந்தித்து; நின்றனன் - நின்றான்; அரக்கர் - கொடிய
அரக்கர்கள்; வந்து - முன்னே வந்து; நேரினும் நேர்வர் - எதிர்த்தாலும்
எதிர்ப்பர்; என்னா - என்று சிந்தித்து; தன்தகை அனைய - தன்னுடைய
தகுதிக்குப் பொருத்தமான; மேனி சுருக்கி - திருமேனியைச் சுருக்கிக்
கொண்டு; அச்சரளச்சாரல் - அந்த தேவதாரு மரங்கள் நிறைந்த
அடிவாரத்தைப் பெற்ற; குன்றிடை இருந்தான் - பவளமலையில் இருந்தான்;
(அப்போது) வெய்யோன் - சூரியன்; குட கடல் குளிப்பதானான் - மேற்குக்
கடலில் மறைவதானான்.

    அனுமன் இவ்வாறுசிந்தித்தபின் அரக்கர்கள் போருக்கு வந்தாலும்
வருவர் என்று கருதித் தன்னுடைய மேனியைச் சுருக்கிப் பவளமலையில்
இருந்தான். 'விசும்பிடைச் செல்லும் வீரன் - பவளமால் வரையில் பாய்ந்து,'
'முட்டுவன மாடம்' 'படை பெரிது என்கோ' (கம்ப. 4829, 4835, 4875)
என்றனன் என்பது கம்பர் கண்ட மாட்டு.                       (42)