4884. | தேவரும் அவுணரும் செங்கண் நாகரும் மேவரும் இயக்கரும், விஞ்சை வேந்தரும், ஏவரும் விசும்புஇருள்இரிய ஈண்டினார், தாஅரும் பணிமுறைதழுவும் தன்மையார். |
தேவரும் அவுணரும்- தேவர்களும் அசுரர்களும்; செங்கண் நாகரும்- சிவந்த கண்களையுடைய நாகலோகத்தவர்களும்; மேவுஅரும் இயக்கரும் -எல்லோரும் விரும்பும் யட்சர்களும்; விஞ்சை வேந்தரும் - வித்தியாதரத்தலைவர்களும்; யாவரும் - (கூறப்பெறாத) மற்றவர்களும்; தா அரும் பணி -தீமை அற்ற வேலைகளை; முறை தழுவும் - கிரமப்படி மேற்கொள்ளும்;தன்மையார் - இயல்பை உடையவராய்; விசும்பு - ஆகாயத்தின்கண்; இருள்இரிய - இருளானது சிதறி ஓடும்படி; ஈண்டினார் - ஒன்று கூடினார்கள். தேவர்கள்முதலானவர்கள், தங்கள் தங்கள் பணியைச் செய்ய இருள் சிதறியோடும்படி விண்ணில் ஒன்று கூடினர். அவுணர் - அசுரர் - இவர்கள் இரவில் பணிபுரிபவர். (50) |