4885. | சித்திரப்பத்தியின் தேவர் சென்றனர் இத்துணைதாழ்த்தனம்; முனியும் என்றுதம் முத்தின்ஆரங்களும் முடியும் மாலையும் உத்தரீ யங்களும்சரிய ஓடுவார், |
சித்திரப்பத்தியின் - ஓவியங்களின்வரிசைபோல; சென்றனர் தேவர் -சென்று கொண்டுள்ள தேவர்கள்; இத்துணை தாழ்த்தனம் - இவ்வளவு நேரம்தாமதித்து விட்டோம்; முனியும் என்று - (இராவணன்) கோபிப்பான் என்றுகருதி (அச்சமுற்று); தம் - தம்முடைய; முத்தின் ஆரங்களும் - முத்துக்கள் கோக்கப் பெற்ற ஆரங்களும்; முடியும் மாலையும் - கீரிடங்களும் பூமாலைகளும்; உத்தரீயங்களும் - மேலாடைகளும்; சரிய - நழுவி விழும்படி; ஓடுவார் - ஓடுவார்கள். இராவணன்தேவர்கள்பால் பகையுடையான் ஆதலின் அவர்கள் பணிவில் காலதாமதம் நேர்ந்தால் சினப்பான். அவுணர் முதலானவர்கள் அரக்கர்களின் செல்லப் பிள்ளைகள் போலும். இராவணன்கொடுங்கோன்மை கூறப்பட்டது. (51) |