நிலவு தோன்றிப்பரவுதல் | 4886. | தீண்டஅருந் தீவினை தீக்கத் தீந்து போய் மாண்டு அறஉலர்ந்தது; மாருதிப் பெயர் ஆண்தகைமாரிவந்து அளிக்க, ஆயிடை ஈண்டு அறம்முளைத்துஎன முளைத்தது இந்துவே. |
தீண்ட அரு -எவரும்அணுக முடியாத (கொடிய); தீவினை - தீய பாவங்கள்; தீக்க - சுட்டுப் பொசுக்க; தீந்து போய் - கருகிப் போய்;அறம் - அறமானது (தருமமானது); மாண்டு - மடிந்து; அற உலர்ந்தது - பசையற்றுக் காய்ந்து போயிற்று; மாருதிப் பெயர் - மாருதி என்னும் பெயரைப் பெற்ற; ஆண்தகை மாரி - ஆண்மை மிக்க மழையானது; வந்து அளிப்ப - இலங்கைக்கு வந்து திருவருள் செய்ய; ஆயிடை - அப்போது; ஈண்டு - இந்த உலகத்தில்; முளைத்து என - முளைத்தால் போல; இந்து - சந்திரன்; முளைத்தது - உதயம் ஆயிற்று. தீவினையால்தீய்ந்துபோன தருமம், அனுமன் என்னும் மழையால் மீய முளைத்ததைப் போல சந்திரன் உதித்தான் மீண்டு அறம் முளைத்த வெண்ணிலா' என்ற பாடமும் சிறப்புடைத்து. (52) |