4888.

கற்றைவெண்கவரிபோல் கடலின் வெண்திரை
சுற்றும் நின்றுஅலமர, பொலிந்து தோன்றிற்றால்-
'இற்றது என்பகை'என எழுந்த இந்திரன்
கொற்றவெண்குடைஎனக் குளிர்வெண் திங்களே.

     என்பகை -என்னுடையஅரக்கப் பகை; இற்றது என - இறந்துவிட்டதுஎன்று (பூரித்து); எழுந்த - (உலாவச் செல்லப்) புறப்பட்ட;
இந்திரன் -இந்திரனுடைய; வெண்கொற்றக்குடை என - வெண்கொற்றக் 
குடை போல;குளிர்வெண்திங்கள் - குளிர்ந்த வெள்ளிய பூரண சந்திரன்;
கடலின்வெண்திசை - கடலில் உள்ள வெண்மையான அலைகள்; கற்றை -
தொகுதியான; வெண்கவரி போல் - வெண்சாமரையைப் போல; சுற்றி நின்று
அலமர -
சுற்றுப் பக்கத்தில் இருந்து சுழன்று சுழன்று அசைய; பொலிந்து
தோன்றிற்று -
பொலிவு பெற்று விளங்கிற்று.

     எழுந்த -புறப்பட்ட 'அருட்கொம்பு ஆயினான் எழுந்திலன்' (கம்ப.
754.) ஆல், அசை.                                         (54)