4906.

எவ்அமரர், எவ் அவுணர், ஏவர் உளர் - என்னே !-
கவ்வைமுதுவாயிலின் நெடுங்கடை கடப்பார் ?
தெவ்வர் இவர்;சேமம்இது; சேவகனும் யாமும்
வெவ்வமர்தொடங்கிடின் எனாய் விளையும் ?
                                    என்றான்.

     கவ்வை - ஆரவாரம் மிக்க;முதுவாயிலின் - பழமையான
கோபுரவாயிலின்; நெடுங்கடை - நீண்ட முற்றத்தை; கடப்பார் - கடந்து
செல்ல வல்லவர்கள்; எ அமரர் - எந்தத் தேவர்குழுவில்; எ அவுணர் -
எந்த அசுரர் குழுவில்; ஏவர் உளர் - எவர்கள் இருக்கின்றார்கள்; என்னே -
என்ன அதிசயம்; தெவ்வர் இவர் - பகைவர்கள் இத்தகையவர்; சேமம் இது
-
பாதுகாப்பு இத்தகையது (என்றால்); சேவகனும் யாமும் - இராமபிரானும்
யாங்களும்; வெவ் அமர் தொடங்கிடின் எனாய் விளையும் - கொடிய
போரைத் தொடங்கினால் எதுவாக முடியுமோ; என்றான் - என்று (அனுமன்)
சிந்தித்தான்.

     நெடுங்கடை -நீண்டமுற்றம் - ,முரசெய்து ! கடைத்தலை (பால-
கையடை-10)                                             (72)