4907. | கருங்கடல்கடப்பது அரிதுஅன்று; நகர் காவற் பெருங்கடல்கடப்பது அரிது; எண்ணம் இறைபேரின் அருங்கடன்முடிப்பது அரிதுஆம்; அமர் கிடைக்கின் நெருங்கு அமர்விளைப்பர் நெடுநாள் என நினைந்தான். |
கருங்கடல்கடப்பது - ஆழமான கடலைத்தாண்டுவது; அரிது அன்று- பெருஞ்செயல் அன்று; நகர் - நகரிலே அமைந்த; காவல் பெருங்கடல் -காவலாகிய பெரிய கடலை; கடப்பது அரிது - கடந்து செல்வதுபெருஞ்செயல்; எண்ணம் - என்னுடைய ஆலோசனை (உணர்வின் வயப்பட்டு); இறை பேரின் - சிறிது பிறழ்ந்தால்; அருங்கடன் - பிராட்டியைக்காண்பதாகிய கடமையை; முடிப்பது அரிது ஆம் - நிறைவேற்றுதல்முடியாமல்போம்; அமர் கிடைக்கின் - (இவர்கட்கு) போர் செய்யும்வாய்ப்புக்கிட்டினால்; நெடுநாள் - பலமாதங்கள்; நெருங்கு அமர் விளைப்பர்- செறிவான போரை வளர்ப்பார்கள்; என நினைந்தான் - என்று (அனுமன்)சிந்தித்தான். அனுமன் வீரன்ஆகையால் பகைவரைக் கண்டதும் உணர்ச்சி வயப்பட்டான். நிலைதெரிந்து அடங்கினான். ஆழக் கடல் கருமைநிறம் பெறும். ஆதலின் கருங்கடல் என்பதற்கு ஆழமான கடல் என்று கூறப்பெற்றது. (73) |