இலங்காதேவிஅனுமனைத் தடுத்தல்

                     சந்தக்கலித்துறை

4909.

நாள்நாளும்தான் நல்கிய காவல் நனிமூதூர்
வாழ்நாள்அன்னாள் - போவதின் மேலே வழி
                                 நின்றாள்;
தூண் ஆம்என்னும்தோள் உடையானை -
                               சுடரோனைக்
காணா வந்தகட்செவி என்னக் கனல் கண்ணாள்.

(அவ்வமயத்தில்)

     நாள் நாளும் -தினந்தோறும்; தான் - தன்னால்; காவல் நல்கிய -
பாதுகாப்பு வழங்கப்பெற்ற; நனி மூதூர் - மிகப் பழமையான இலங்கையின்;
வாழ்நாள் அன்னாள் - ஆயுட்காலம் போன்றவளும்; சுடரோனை -
ஒளிவீசுகின்ற சூரியனை; காணா வந்த - கண்டு விழுங்குவதற்கு வந்த;  கட்
செவி என்ன -
பாம்பைப் போல; கனல் கண்ணாள் - நெருப்பைக்கக்கும்
கண்களையுடையவளும்; தூணாம் என்னும் - தூணே நிகராகும் என்று
கூறத்தக்க; தோள் உடையானை - தோள்களைப் பெற்ற அனுமன்;
போவதின் வழி மேலே - செல்லும் வழியின் கண்ணே; நின்றாள் (மறித்து)
-
நிற்பவளும்.

     தோளுடையானை - ஐ- சாரியை இரண்டன் உருபு அன்று யாவும்
சூனியம், சத்து எதிர் - என்று கூற வேண்டியதை "யாவையும் சூனியம் சத்து
எதிர்" என்றார் மெய்கண்டார். பாடிய காரர் இரண்டன் உருபு விரியாமையைக்
கண்டு தெளிக. மலைப் பாம்புபோல் ஐ பாட்டிலுள்ளது. இரண்டன் உருபு
என்று கருதிப் பாடபேதம் செய்தவர்
 உளர். மா - மா -விளம் - மா - காய்
என்னும் சீர்களை முறையே பெற்றுவரும் இந்த யாப்பை வடநூலார்
'மத்தமயூரம்' என்பர், இத்தகைய பாடல்கள் இந்நூலுள் 154 உள்ளன
(மணிமலர் 76)                                           (75)