4911.

பாரா நின்றாள், எண்திசை தோறும்; பலர் அப்பால்
வாரா நின்றாரோ? என;மாரி மழையே போல்
ஆரா நின்றாள்;நூபுரம் அச்சம் தரு தாளாள்;
வேரா நின்றாள்;மின்னின் இமைக்கும் மிளிர்
                                    பூணாள்.

(அவள்)

     அப்பால் -நீண்ட தூரத்துக்கு அப்புறத்திலே; பலர் வாரா
நின்றாரோ-
பலர் வந்து கொண்டிருக்கிறார்களோ; என - என்று
ஐயங்கொண்டு; எண்திசை தோறும் - எட்டுத் திக்குகளிலும்; பாரா
நின்றாள் -
நோக்கியவண்ணம் இருப்பவளும்; மாரி மழையே போல் -
கார்கால மேகம் போல்;ஆரா நின்றாள் - முழங்கி நிற்பவளும்; அச்சம் தரு
-
பகைவர்களுக்குஅச்சத்தை விளைவிக்கும்; நூபுரம்
தாளாள் -
சிலம்பணிந்தபாதத்தையுடையவளும்; வேரா நின்றாள் - கோபித்து
நிற்பவளும்; இமைக்கும் மின்னின் - இமைக்கின்ற மின்னலைப் போல;
மிளிர் பூணாள் -
ஒளிவிடுகின்ற ஆபரணம் அணிந்தவளும்.

     நின்றாள்,முதலானவை, இயல்பைக் காட்டி நின்றன. வேரா நின்றாள்
இதிலுள்ள வேரா - சினத்தைக் காட்டும். இமைத்தல் - இடையிட்டுத்
தோன்றுதல்.                                              (77)