4912.

வேல்,வாள், சூலம், வெங்கதை, பாசம், விளிசங்கம்
கோல், வாள்சாபம், கொண்ட கரத்தாள் வடகுன்றம்
போல்வாள், திங்கள்-போழின் எயிற்றாள், புகைவாயில்
கால்வாள்;காணின் காலனும் உட்கும்கதம் மிக்காள்.

     வேல் வாள் சூலம்- வேலும்வாளும் சூலமும்; வெங்கதை பாசம் -
கொடிய கதையும், பாசமும்; விளி சங்கம் - சேனைகளை அழைக்கின்ற
சங்கும்; கோல் வாள் சாபம் - அம்பும் கொடிய வில்லும்; கொண்ட
கரத்தாள் -
ஏந்திய கையையுடையவளும்; வடகுன்றம் போல்வாள் -
மேருமலையை ஒத்தவளும்;
திங்கள் போழின் -சந்திரனின் பிளவைப்
போன்ற; எயிற்றாள் -பற்களையுடையவளும்; வாயில் புகை கால்வாள் -
வாயில் புகையைக்கக்குபவளும்; காணின் - உற்றுப் பார்ப்பாளாயின்;
காலனும் உட்கும் -
யமனும் பயப்படும்; கதம் மிக்காள் - கோபம்
மிக்கவளும்.

     வாள் இருமுறை இக்கவிதையில் காட்சி தருகிறது. இரண்டாம் வாள்
கொடுமை எனும் பொருள் தருகிறது. கோல் 'தோல்' என்ற பாடம் ஒரு
பிரதியில் காணப்படுகிறது. தோல் - கேடயம், இப்பாடம் சிறக்கும்போலும்.

     போழ் - பிளவு. திங்கட்பிளவு - பிறைச்சந்திரன். காணில் - எமன்
செயலாக்கினும் அமையும்.                                 (78)