4915. | எல்லாம்உட்கும் ஆழி இலங்கை இகல்மூதூர் நல்லாள்;அவ்ஊர் வைகுஉறை ஒக்கும் நயனத்தாள்; 'நில்லாய்! நில்லாய்!' என்று உரை நேரா நினையாமுன் வல்லேசென்றாள்; மாருதி கண்டான்; வருகஎன்றான். |
எல்லாம் உட்கும்- எல்லாஉயிர்க் கூட்டங்களும் பயப்படும்படியான; ஆழி இலங்கை - கடலாற் சூழப்பெற்ற இலங்கையாகிய பழமையான ஊர்க்கு; இகல் மூதூர் நல்லாள் - வலிமை மிக்க நன்மை செய்பவளும்; அ ஊர் வைகும் - அந்த இலங்கை தங்கும்; உறை ஒக்கும் நயனத்தாள் - உறை போன்ற கண்களையுடையவளும் ஆகிய இலங்கை மாதேவி; (அனுமனை நோக்கி) நில்லாய் நில்லாய் - நில், நில்; என்று உரை நேரா - என்று முழங்கி; நினையா முன் - (எதிரே வருவார் யார் என்று அனுமன்) எண்ணுவதற்கு முன்னே; வல்லே சென்றாள் - வேகமாக (அனுமன் முன்) போனாள்; கண்டான் மாருதி - அதைக் கண்ட அனுமன்; வருக என்றான் - வருவாயாக என்று கூறினான். ஆழி - கடற்கரை.ஆழி கடல் அரையா - சுந்தரர். பெருங்கடற்கு ஆழியனையன் (புறம் 330). சான்றாண்மைக்கு ஆழி எனப்படுபவர் (குறள் 989) அழகர் உரை. (81) |