4918.

என்னாமுன்னம், 'ஏகு' என, ஏகாது, எதிர்மாற்றம்
சொன்னாயே ? நீயாவன் அடா ? தொல்புரம்
                                 அட்டான்
அன்னாரேனும்அஞ்சுவர், எய்தற்கு;
அளியுற்றால்
உன்னால் எய்தும்ஊர்கொல் இவ்ஊர், என்று,
                                 உறநக்காள்.

     என்னா முன்னம் -என்றுஅனுமன் கூறுவதற்கு முன்னே;
(இலங்கைத்தேவி
அனுமனை நோக்கி) ஏகு என - நான், 'போ' என்று
கட்டளையிடவும்; ஏகாது - போகாமல்; எதிர் மாற்றம் சொன்னாயே -
எதிர் மொழி பேசுகிறாயே; அடா - அற்பனே; நீ யாவன் - நீ யார்?; தொல்
-
பழமையான; புரம் அட்டான் அன்னாரேனும் - முப்புரம் எரித்த
சிவபிரான் போன்றவர்களும்; எய்தற்கு - என்முன் வருவதற்கு; அஞ்சுவர் -
பயப்படுவார்கள் (அப்படியிருக்க); அளி உற்றால் - ஊரைக் காண வேண்டும்
என்னும் ஆசை உனக்கு வந்தால்; இவ் ஊர் - இந்த இலங்கை; உன்னால்
எய்தும் ஊர்கொல் -
 உன்னால் அடையத்தக்க எளிய ஊரா? என்று -
என்று கூறி; உற நக்காள் - மிகுதியாகச் சிரித்தாள்.

     எய்துதற்கு -(இந்த நகரை) அடைய என்னும் பொருள் கூறப்பெற்றது.
                                                         (84)