4919. 

நக்காளைக்கண்டு ஐயன் மனத்து ஓர்நகை
                               கொண்டான்;
நக்காய்,நீயார் ? ஆர்சொல வந்தாய் ? உனது ஆவி
உக்கால் ஏதுஆம்? ஓடலை ? என்றாள் இனி இவ்வூர்
புக்கால் அன்றிப் போகலென் என்றான் புகழ்
                              கொண்டான்.

     ஐயன் - ஒப்பற்ற அனுமன்;நக்காளைக் கண்டு - சிரித்த இலங்கைத்
தேவியைப் பார்த்து; மனத்து - உள்ளத்துக்குள்ளே; ஓர் நகை கொண்டான்
-
சிரித்துக் கொண்டான்; (அப்போது
 இலங்கைத் தேவி ஐயனைநோக்கி)
நக்காய் - (அடே நீ) என்னைப் பார்த்துச் சிரிக்கவா செய்தாய்; நீ யார் - நீ
யாவன்; யார் சொல வந்தாய் - எவர் கட்டளையிட வந்திருக்கிறாய்; உனது
ஆவி -
உன்னுடைய உயிர் (என்னால்); உக்கால் ஏது ஆம் - அழிந்தால்
(உனக்கு) பயன் யாது?; ஓடலை - அடே ! ஓடிப் போக மாட்டாய்; என்றாள்
-
என்று கூறினாள்; (அப்போது) புகழ் கொண்டான் - புகழ் பெற்ற அனுமன்;
இனி -
இப்போது; இ ஊர் புக்கால் அன்றி -  இந்த நகருக்குள்
நுழையாமல்; போகலென் - (திரும்பிச்) செல்ல மாட்டேன்; என்றான் -
என்று கூறினான்.

     இனி - இப்போது;இனி நினைந்து இரக்கம் ஆகின்று (புறம்) இனிமேல்
என்று அதற்குப் பொருள் கூறுவது நன்றேல் கொள்க. புக்கு - ஆல் -
புகுந்தால் (நுழைந்தால்) ஆல் - எதிர்கால வினை எச்ச விகுதி. உருபு அன்று.
                                                          (85)