4921. | கொல்வாம்; அன்றேல் கோளுறும் இவ்ஊர் எனல் கொண்டாள்; 'வெல்வாய், நீயேல், வேறி'என, தன் விழிதோறும் வல்வாய்தோறும், வெங்கனல் பொங்க, மதிவானில் 'செல்வாய்' என்னா மூவிலை வேலைச் செலவிட்டாள்.* |
(இலங்கைத் தேவி) கொல்வாம் -நாம்இவளைக் கொல்வோம்; அன்றேல் - கொல்லப்படாமல் விட்டு விட்டால்; இ ஊர் - இந்த இலங்கை; கோள் உறும் - (இவனால்) அழிக்கப்படும்; எனல் கொண்டாள் - என்று மனத்தி்லே எண்ணி; வெல்வாயேல் - என்னை வெற்றி கொள்ள முடிந்தால்; நீ வேறி - நீ வெல்லுக; என - என்று கூறி; விழிதோறும் - கண்கள் தோறும்; வல்வாய்தோறும் - கொடிய வாய்கள் தோறும்; வெங்கனல் பொங்க - கொடிய நெருப்பு மூண்டு எரிய; மூ இலை வேலை - மூன்று தலைகளையுடைய சூலத்தை; மதி வானில் - சந்திரன் ஒளி வீசும் வானிலே; செல்வாய் என்னா - செல்லுவாயாக என்று கூறி; செலவிட்டாள் - அனுமன்மேல் வீசி எறிந்தாள். 'சூலம்' முத்தலைபெற்று, வேல்போல இருத்தலின் வேல் என்று கூறினான். (87) |