4922.

தடித்துஆம்என்னத் தன்எதிர் செல்லும்
                               தழல்வேலைக்
கடித்தான்,நாகம் விண்ணில் முரிக்கும் கலுழன்
                                போல்
ஒடித்தான்கையால் - உம்பர் உவப்ப, உயர்காலம்
பிடித்தாள்நெஞ்சம் துண்ணென, - எண்ணம்
                                 பிழையாதான்.

     எண்ணம்பிழையாதான் -நினைவாலும் தவறு செய்யாத அனுமன்;
உம்பர் உவப்ப -
தேவர்கள் மகிழும்படி; உயர்காலம் பிடித்தாள் - சிறந்த
பாசத்தைப் பற்றிய இலங்கைத்தேவி; துண் என - திடுக்கிடும்படியாகவும்;
தடித்து ஆம் என்ன -
மின்னலே ஒப்பு என்று கூறும்படி; தன் எதிர்
செல்லும்  -
தன் முன்னே வரும்; தழல்வேலை - நெருப்பைக் கக்கும்
வேலாயுதத்தை; கடித்தான் - பற்களால் கடித்து; கையால் - கைகளால்;
விண்ணில் -
 ஆகாயத்தின்கண்; நாகம் - பாம்புகளை; முரிக்கும்
கலுழன்போல் -
முறிக்கின்ற கருடனைப் போல; ஒடித்தான் - துண்டு
துண்டாகச் சிதைத்தான்.

     காலம் - பாசம்."சூலம் எனில் அன்று. இது தொல்லை வரும் காலம்'
(கம்ப . 8378) அண் - கழகம்) காலம் பிடித்தாள் - அச்சூலத்தை நீண்ட
காலம் பிடித்தவள் என்று கூறப் பெற்றவுரை நன்றேல் கொள்க. காலம்
பிடித்தாள் (என்பதை) - சூலம் பிடித்தான் என்று பாடபேதம் செய்தாரும்
உளர்.                                                 (88)