யான் - நான்; இந்தமூதூர் - இந்தப் பழமையான இலங்கையை; எத்தனை காலம் காப்பென் - எவ்வளவு காலம் பாதுகாப்பேன்; என்று - என்று; முத்தனை வினவினேற்கு - வினைகளைக்கடந்தபிரம்ம தேவனை வினாவிய என்னிடம்;(அந்த முத்தன்) முரண் வலி - பெரு வலி பெற்ற; குரங்கு ஒன்று - ஒரு குரங்கு; உன்னை - (இலங்கைக் காவலை மேற்கொண்ட) உன்னை; கைத்தலம் அதனால் தீண்டி- தன்னுடைய கைகளால் தொட்டு; காய்ந்த அன்று - சினம் கொண்டகாலத்தில்; என்னைக் காண்டி - என்னைப் பார்ப்பாய்; பின்னை - பிறகு;சித்திர நகரம் - அழகிய இலங்கை நகரம்; சிதைவது திண்ணம் என்றான் -அழிவது உறுதி என்று கூறினான்.
காளிதாசன்பிரம்மதேவனைப் பரம் பொருள் என்பான் (குமாரசம்பவம்) முத்தன் - பரமன். இராமனை முத்தனார் என்பார் (கும்ப 261) (94)