4954.

கோவையும்குழையும் மின்ன,
    கொண்டலின் முரசம் ஆர்ப்ப,
தேவர்நின்று ஆசிகூற,
     முனிவர்சோபனங்கள் செப்ப,
பாவையர்குழாங்கள் சூழ,
     பாட்டொடுவான நாட்டுப்
பூவையர் பலாண்டுகூற,
     புதுமணம்புகுகின்றாரை-

     கொண்டலின் -மேகத்தைப்போல; முரசம் ஆர்ப்ப - முரசங்கள்
முழங்கவும்; நின்று - நின்றுகொண்டு; தேவர் ஆசிகூற - தேவர்கள் ஆசிகள்
கூறவும்; முனிவர் - முனிவர்கள்; சோபனங்கள் செப்ப - மங்கல
வாழ்த்துக்கள் பாடவும்; பாவையர் குழாங்கள் - பெண்கள் கூட்டங்கள்;
பாட்டொடு - பாட்டுக்களோடு; சூழ - சுற்றியிருக்கவும்; வானநாட்டுப்
பூவையர் -
தேவலோகப் பெண்கள்; பலாண்டு கூறு - பல்லாண்டுகள் பாட;
கோவையும் - முத்துக்களாலும் மணிகளாலும் அமைந்த மாலைகள்; குழைகள்
மின்ன -
மகரக் குழைகள் ஒளி வீசவும்; புதுமணம் புணர்கின்றாரை -
புதுமணம் புரிகின்றவர்களையும்.                             (120)