4965.

குறுகி,நோக்கி, மற்று அவன்தலை ஒருபதும்,
                                    குறித்த
இறுகு திண்புயம்இருபதும், 'இவற்குஇலை' என்னா,
மறுகி ஏறியமுனிவுஎனும் வடவைவெங் கனலை
அறிவு எனும்பெரும் பரவை அம் புனலினால்,
                                  அவித்தான்.

     மற்று - பிறகு; குறுகிநோக்கி - (அரக்கனை) நெருங்கிப் பார்த்து;
அவன் -
அந்த இராவணனுக்கு அடையாளமான; ஒருபது தலையும் -
பத்துத் தலைகளும்; குறித்த - கணக்கிட்ட; இறுகு - செறிவைப் பெற்றுள்ள;
இருபது திண்புயமும் -
இருபது தோள்களும்;  இவற்கு இலை -  இந்த
அரக்கனுக்குக் கிடையாது; என்னா - என்று ஆராய்ந்து அறிந்து (அனுமன்);
மறுகி -
உள்ளம் கலங்கி; ஏறிய -  மேலும் மேலும் பெருகி வருகின்ற;
முனிவு எனும் -
கோபம் என்கின்ற; வடவை வெங்கனலை - கொடிய
வடவைத் தீயை; அறிவு எனும் - ஞானம் என்கின்ற; பெரும் -
பெருமையுடைய; அம் -அழகிய; பரவைப் புனலினால் -  கடலின்
தண்ணீரினால்; அவித்தான் - அணைத்தான்.

     
எதிரே இருப்பவன்இராவணன் என்று கருதியபோது உண்டாகிய சீற்றம்
( இராவணன் அல்லன் என்ற போது) அவிந்தது. இராவணன் செய்த
தீச்செயலால் அனுமன் அவன்பால் சீற்றம் கொண்டான். வெறும் புல்லர்
தீமையை வேரற்றொழிக்கும்..... கொடும் சினம் மாசற்றார் கோள் (உரைச்
சூத்திரம்)                                           (131)