4986. | நலத்தமாதர் நறை அகில், நாவியும், அலத்தகக்குழம்பும், செறிந்து, ஆடிய இலக்கணக்களிறோடு இளமெல் நடைக் குலப் பிடிக்கும்ஓர் ஊடல் கொடுக்குமால் |
(அவ்வகழி) நலத்த மாதர் -அழகியபெண்கள்; நறை அகில் - கூந்தலுக்கு ஊட்டிய அகிற்புகையும்; நாவியும் - (அவர்கள்) மேனியின் கஸ்தூரியும்; அலத்தகக் குழம்பும் - (அவர்கள்) பாதத்திற் பூசிய செம்பஞ்சுக் குழம்பும்; செறிந்து - அகழி நீரிற் கரைந்து; ஆடிய - நீராடிய; இலக்கணக் களிறோடு - உத்தம இலக்கணம் அமைந்த ஆண்யானைகட்கும்; இள - இளமையும்; மெல்நடை - மென்மையும் (அமைந்த); குலப்பிடிக்கும் - உயர்குலத்துப்பெண் யானைகட்கும்; ஓர் - ஒப்பற்ற; ஊடல் கொடுக்கும் - ஊடலை வழங்கும். மகளிரால் நிறம் வேறுபட்ட புனல் மூழ்கிய பறவை ஊடல் கொள்வதை, 'குதலையர் குடைந்த தண்புனல்வாய், குங்குமச் சுவடுற, ஊடிப் பூவுறங்கினும் புள் உறங்கா தன பொய்கை" என்று கூறியது (கம்ப.460) காண்க. (152) |