| 4987. | நறவு நாறியநாள்நறும் தாமரை துறைகள் தோறும்முகிழ்த்தன தோன்றுமால்- சிறையின்எய்திய செல்வி முகத்தினோடு உறவு தாம்உடையார் ஒடுங்கார்களோ ? |
நறவு நாறிய -தேன்மணம்வீசுகின்ற; நாள் நறுந் தாமரை - நறுமணம்வீசும் புதிய தாமரைகள்; துறைகள் தோறும் - அவ்வகழியின் எல்லாத்துறைகளிலும்; முகிழ்த்தன தோன்றும் - குவிந்து தோன்றும்; சிறை எய்திய -சிறையை அடைந்த; செல்வி முகத்தினோடு - பிராட்டியின் முகத்துடன்; உறவு உடையார்தாம் - உறவைப்பெற்றவர்கள்; ஒடுங்கார்களோ - ஒடுங்காமல் இருப்பார்களோ ? சீதை சிறைபுக்கதால் அவள் முகம் போன்ற தாமரைகள் குவிந்து கிடந்தன - தற்குறிப்பேற்றம். சிறையின் எய்திய செல்வி - என்பதில் உள்ள 'இன்' அசை சிலம்பின் வன்வார்ச் சிறுபறைகரங்க என்னும் சிந்தாமணிப் பாடலுக்கு (கோவிந்தை - 50) உரை வழங்கிய இனியர் 'இன்' அசை என்றார். சிறை எய்திய செல்வி என்க. தாம் - உரையசை. (153) |