கலி விருத்தம் 5001. | போர் இயற்கை இராவணன் பொன்மனை சீர் இயற்கைநிரம்பிய திங்களா தாரகைக் குழுவின்தழுவித் தொடர் நாரியர்க்குஉறைவுஆம் இடம் நண்ணினான். |
(அனுமன்) போர் இயற்கை -போர்புரிதலை இயல்பாகக் கொண்ட; இராவணன் - இராவணனுடைய; பொன்மனை - அரண்மனை; சீர் - சிறப்பும்; இயற்கை -அழகும்; நிரம்பிய - நிறைந்துள்ள; திங்களா - சந்திரன் போல;தாரகைக்குழுவின் - நட்சத்திரக் கூட்டங்களைப் போல; தழுவித் தொடர் - சுற்றிலும்அணைத்துத் தொடர்ந்துள்ள; நாரியர்க்கு - மகளிர்களுக்கு; உறைவு ஆம்இடம் - இருப்பிடமாய் அமைந்த இடத்தை; நண்ணினான் - அடைந்தான். இராவணன் வீடுசந்திரனைப் போலவுள்ளது. அவன் காதலியர்களின் இல்லங்கள் நட்சத்திரங்களைப் போல் இருந்தன என்க. திங்கள் ஆய் - என்பதிலுள்ள 'ஆய்' என்பது உவம உருபுப் பொருளைத் தந்தது. 'எனக்கு ஆவார் ஆர் ஒருவர்' என்னும் பொய்கைப் பிரான் வாக்கை உன்னுக. (திவ்ய முதல் திரு 89) (167) |