| 5003. | தழைந்தமொய்ஒளி பெய்ம் மணித் தாழ்தொறும் இழைந்த நூலினும்இன்இளங் காலினும், நுழைந்துநொய்தினின் மெய்உற நோக்கினான் - விழைந்தவெவ்வினை வேர்அற வீசினான். |
விழைந்தவெவ்வினை - பொருள்களைவிரும்புவதால் உண்டான வினைகளை; வேர் அற - மூலம் அற்றுப்போக; வீசினான் - ஒதுக்கித் தள்ளிய அனுமன்;(அந்த மாளிகைகளில்) தழைந்த - மிக்குள்ள; ஒளி - பிரகாசம்; மொய் -மொய்த்துள்ள; மணி - மணிகள்; பெய் - பதிக்கப்பெற்ற; தாழ்தொறும்-தாழ்ப்பாள்கள் தோறும்; இழைந்த நூலினும் - இழைக்கப் பெற்ற நூலைவிட;இன் - இனிமையான; இளங்காலினும் - தென்றலைவிட; நொய்தினின் - நுட்பமாக; மெய் உற - மேனி அமைய; நோக்கினான் - பார்த்தான். அனுமன்,நூலைவிடவும், தென்றலைவிடவும் நுட்பமான மேனியைப்பெற்று தாழ்கள் தோறும் நுழைந்து பார்த்தான். தாழ் என்றது கதவுத் துளைகளை. முத்தொள்ளாயிரம் 'கதவம் தொளை' என்று குறிப்பிடும். (169) |