5006.

பழுதுஇல்மன்மதன் எய்கணை பல்முறை
உழுதகொங்கையர், ஊசல் உயிர்ப்பினர்
அழுது செய்வது என்? ஆசை அரக்கனை
எழுதலாம் கொல்? என்று, எண்ணுகின்றார் சிலர்.

     சிலர் - சில யட்சமகளிர்; மன்மதன் எய் - மன்மதனால் ஏவப்பெற்ற;
பழுதுஇல்கணை -
குறி தவறாத அம்புகளால்; பலமுறை - பலதடவை; உழுத
-
பிளக்கப் பெற்ற; கொங்கையர் - தனங்களை உடையவராய்; ஊசல்
உயிர்ப்பினர் -
தளர்ந்த உயிரையுடையவராய்; அழுது செய்வது என் -
அழுதலைச் செய்வதால் யாது பயன்? ஆணை - கட்டளையிடுவதில் வல்ல;
அரக்கனை -
இராவணனை; எழுதல் -  ஓவியத்தில் தீட்டுதல்; ஆம் கொல்
-
நம்மால் இயலுமா ? என்று-; எண்ணுகின்றார் - நினைக்கின்றனர்.

     உயிர்ப்பு, மூச்சுஎன்றும் கூறலாம். சிறப்பெனிற் கொள்க. எழுதல்
சித்திரம் வரைதல்.                                           (172)