5015.

நகைஎரிக்கற்றை நெற்றி
     நாவிதோய்ந் தனைய ஓதி,
புகைஎனத் தும்பிசுற்ற,
     புதுமலர்ப்பொங்கு சேக்கை
பகைஎன ஏகி,யாணர்ப்
    பளிங்குடைச் சீதப் பள்ளி,
மிகைஒடுங் காதகாம
    விம்மலின், வெதும்பு வாரும்.*

     நகை எரிக்கற்றை நெற்றி - விளங்கும் நெருப்புத்தொகுதி மேலாக;
நாவி தோய்ந்து அனைய - (அதில்) கஸ்தூரியைப் பூசினாற் போன்ற;  ஓதி
-
கூந்தலில்; புகை என - புகை போல; தும்பி சுற்ற - வண்டுகள் மொய்க்க;
புதுமலர் - புதிய பூக்கள்; பொங்கு சேக்கை - நிரம்பிய படுக்கையை; பகை
என ஏகி -
பகை என்று கருதி
 விலகிச் சென்று; யாணர் - புதுமையான;
பளிங்குடை - பளிங்கைப் பெற்ற; சீதப்பள்ளி - குளிர்ந்த படுக்கையில்;
மிகை ஒடுங்காத - மிகுதல் குறையாத; காம விம்மலின் - காம ஏக்கத்தால்;
வெதும்புவாரும் - வெப்பம் அடைபவர்களும்.

     அரக்கியர்கூந்தல் செந்நிறமுடையதாதலின் எரிக்கற்றை நெற்றி என்றார்.
செந்நிறக் கூந்தலில் உள்ள வண்டுகள் நெருப்பைச் சார்ந்த புகை போன்று
உள்ளன.                                                 (181)